Skip to main content

தேவி தரிசனம்


திருநகை பொருந்திய

என் தேவியின்

வெட்கம் பொதிந்த

நல் முகம்,

இந்த பாவியின்

பாவங்களை தீர்த்ததோ!!


உடல் அணுக்களுக்குள்

ஒரே குழப்பம், கூச்சல்

தன் உயிரின் பாதியை

உணர்ந்துவிட்டாதோ என்னவோ

தேவியின் விரல் தீண்டியதால்.


குத்தி கிழிக்கும் மூக்கு

வெட்கம் பட்டவுடன்

சிவப்பது என்ன மாயமோ!


கண்ணில் என்ன மாயம்

வைத்து இருக்காளோ

கண்ணில் பட்டவரை

எல்லாம் மாய வலையில்

விழ செய்கிறது.


இடையில் உரசும் உடைகள்

இவளுக்கு என்ன

தேவ மங்கையர்களிடம்

இருந்து பெறப்பட்டதோ.


சொல் பேச்சி

கேட்கவில்லை

இந்த நெஞ்சு,

அதில் கலந்ததோ

காதல் நஞ்சு.


நாளும் தெய்வத்தை

நாடி சென்றதால் - எனை

தேடி வந்த தேவதையே!!!



❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Comments

Popular posts from this blog

காதல் வழிந்தோடுதல்

 ❤️💕❤️💕❤️💕❤️💕💕 உனை காணும் போது எந்த ஒரு காரணமின்றியும் விழி ஓர விழிநீர் விரும்பியே விரைந்து  வழிந்து ஓடுவதே!!!! ❤️💕❤️💕💕❤️💕❤️

நிஜமாகிவிடும்

கணவனுக்கு மனைவி தான் சாமி!!! மனைவிக்கு கணவன் தான் சாமி!!! இதிகாச கதைகளில்!. இதை இருவரில் யாரேனும் ஒருவர் மட்டும் உணர்ந்தால் போதும் உண்மையாகிவிடும் நிஜத்தில்!!!